தூத்துக்குடி துப்பாக்கி சூட்டிற்கு திமுக தான் காரணம்.!! - பரபரப்பை கிளப்பிய ஈபிஎஸ்.!!
EPS alleged DMK was reason for Thoothukudi Sterlite firing
சேலம் மாவட்டம் ஆத்தூரில் அதிமுக சார்பில் நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை அமைக்க 86 ஏக்கர் நிலம் கொடுத்தது திமுக அரசு தான்.ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு நடவடிக்கை எடுத்தது அதிமுக அரசு.
தூத்துக்குடியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட போது அதனை மீறி கலவரம் ஏற்படத் துணை நின்றவர் திமுக எம்எல்ஏ. அப்பாவி மக்களை தூண்டி வட்டு விரும்பத் தகாத செயல்களை தூண்டி விட்டது திமுக தான்.
திமுக, காங்கிரஸ் ஆட்சியில் நீட் தேர்வு கொண்டு வரப்பட்டது. அதை தடுத்து நிறுத்த போராடியது அதிமுக தான். மாஞ்சோலை தொழிலாளர்கள் சம்பவம் போன்ற இன்னும் பல துப்பாக்கி சூடு சம்பவங்கள் திமுக ஆட்சியில் தான் நடைபெற்றுள்ளது" என எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டியுள்ளார்
English Summary
EPS alleged DMK was reason for Thoothukudi Sterlite firing