என் மகனுக்காக நான் பிரச்சாரம் செய்த புகைப்படத்தை காட்டினால் ரூ.1கோடி பரிசு - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்.!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்று முடிந்தது. அதிமுக சார்பில் தென் சென்னை நாடாளுமன்ற தொகுதியில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மகன் ஜெயவர்த்தன் போட்டியிட்டார்.

நேற்று செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசுகையில், என் மகனுக்கு ஆதரவாக நான் பிரச்சாரம் செய்யும் புகைப்படத்தை காட்டினால் 1 கோடி பரிசு. ஜெயவார்த்தனுக்கு தனிப்பட்ட அறிவு , துணிச்சல், தைரியம் உள்ளது. என் மகனுக்கு மட்டும் அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகள் அதிகமாக பிரச்சாரம் செய்ததாக கூறுவது உண்மைக்கு புறமானது என்றார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Election propaganda Jayakumar speech


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->