என் மகனுக்காக நான் பிரச்சாரம் செய்த புகைப்படத்தை காட்டினால் ரூ.1கோடி பரிசு - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்.!!
Election propaganda Jayakumar speech
தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்று முடிந்தது. அதிமுக சார்பில் தென் சென்னை நாடாளுமன்ற தொகுதியில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மகன் ஜெயவர்த்தன் போட்டியிட்டார்.
நேற்று செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசுகையில், என் மகனுக்கு ஆதரவாக நான் பிரச்சாரம் செய்யும் புகைப்படத்தை காட்டினால் 1 கோடி பரிசு. ஜெயவார்த்தனுக்கு தனிப்பட்ட அறிவு , துணிச்சல், தைரியம் உள்ளது. என் மகனுக்கு மட்டும் அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகள் அதிகமாக பிரச்சாரம் செய்ததாக கூறுவது உண்மைக்கு புறமானது என்றார்.
English Summary
Election propaganda Jayakumar speech