பொன்முடியின் மகன் உட்பட 4 பேருக்கு சீட் இல்லை.!! கை விரித்த திமுக.!! அவர்கள் யார் தெரியுமா?
DMK not given chance to 4 sitting mps
திமுக சார்பில் 21 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை கட்சியின் தலைவர் மு.க ஸ்டாலின் இன்று வெளியிட்டார்.
அந்தப் பட்டியலில் புதிதாக 6 பேருக்கு நாடாளுமன்ற பொது தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அதே வேளையில் தற்போதைய சிட்டிங் எம்பிக்களுக்கு மீண்டும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.
அதன்படி செம்மண் குவாரி வழக்கில் சிக்கியுள்ள முன்னாள் அமைச்சர் பொன்முடியின் மகன் கௌதம சிகாமணி, தஞ்சை தொகுதியில் 6 மறை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த பழனி மாணிக்கம், சமூக வலைதளங்களில் திமுகவுக்காக களமாடும் தர்மபுரி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார்,
நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு சேலத்திற்கு விமான சேவை கொண்டு வந்த நாடாளுமன்ற உறுப்பினர் பார்த்திபன் ஆகியோருக்கு திமுகவில் இந்த முறை வாய்ப்பு வழங்கப்படவில்லை.
English Summary
DMK not given chance to 4 sitting mps