மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. எம்.பி-க்கள் கூட்டம்: மக்களின் கோரிக்கைகளை நேரில் கேட்டு உடனடி நடவடிக்கைக்கு உத்தரவு
DMK MPs meet under leadership MK Stalin Orders immediate action after hearing demands people person
தமிழ்நாடு முதல்வர் மற்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று (23.09.2025) சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டத்தை தலைமை தாங்கினார்.இந்த கூட்டத்தில், ஸ்டாலின் எம்.பி-க்களிடம் மக்களின் கோரிக்கைகள் மற்றும் தேவைகளை நேரடியாக கேட்டறிந்து, அவற்றிற்கு உடனடி நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து செயல்பட அறிவுறுத்தினார்.

அதிலும் குறிப்பாக, கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் விடுபட்ட மகளிரை சேர்க்கும் முகாம்களை பராமரித்து, தகுதியுள்ள அனைவரும் உரிமைத் தொகையை பெற வேண்டும் என்றும் தெரிவித்தார்.
இதற்கு முன்பு நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி சாதனை படைத்ததை நினைவூட்டிய ஸ்டாலின், வரும் சட்டமன்ற தேர்தலில் எம்.பி-க்கள், சட்டமன்ற உறுப்பினர்களின் வெற்றிக்கு முழு முயற்சி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
மேலும்,எம்.பி-க்கள் தங்கள் தொகுதிகளில் வாரத்தில் குறைந்தது 4 நாட்கள் தங்கி மக்களை நேரில் சந்தித்து தேவைகளை கேட்டறிந்து நடவடிக்கை எடுக்க, நாடாளுமன்ற அறிக்கைகளை 15 நாட்களுக்கு ஒருமுறை அளிக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.
இந்தக் கூட்டத்தில் கழக பொதுச் செயலாளர் துரைமுருகன், பொருளாளர் மற்றும் மக்களவை குழுத் தலைவர் டி.ஆர். பாலு, நாடாளுமன்ற குழுத் தலைவர் கனிமொழி, மாநிலங்களவை குழுத் தலைவர் திருச்சி சிவா, தலைமைக் கழக நிர்வாகிகள் மற்றும் மக்களவை-மாநிலங்களவை உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
English Summary
DMK MPs meet under leadership MK Stalin Orders immediate action after hearing demands people person