"யார் உண்மையான துரோகி?": ராகுல் காந்தியின் விமர்சனத்திற்கு தயாநிதி மாறன் காட்டமான பதிலடி!
DMK MP Dayanidhi Maran Hits Back at Rahul Gandhi Ettappan Remark
தமிழகம் வந்த மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, தொகுதி மறுவரையறை விவகாரத்தில் திமுகவை மறைமுகமாக 'எட்டப்பர்கள்' என விமர்சித்திருந்த நிலையில், அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் திமுக எம்பி தயாநிதி மாறன் தனது 'எக்ஸ்' தளத்தில் காட்டமான பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
தயாநிதி மாறன் சுட்டிக்காட்டிய 'துரோகங்கள்'
காவிரி & மேகதாட்டு விவகாரம்: தமிழகத்திற்கு வந்து காவிரி உரிமை குறித்தோ, மேகதாட்டு அணை கட்டும் முயற்சிக்கு எதிர்ப்புத் தெரிவிக்காமலோ இருப்பது துரோகம்.
நீட் தேர்வு நிலைப்பாடு: நீட் தேர்வை முற்றிலும் ரத்து செய்ய வலியுறுத்தாமல், அதில் நடக்கும் முறைகேடுகளை மட்டும் பேசுவதும், போராடிய மாணவர்கள் மீதான தாக்குதலைக் கண்டிக்காததும் துரோகத்தின் உச்சம்.
அரசியல் இரட்டை நிலைப்பாடு: பாஜகவின் குதிரைப் பேரத்தைக் கண்டிப்பவர்கள், தவெக-வின் செயல்பாடுகளையும் பாசிசப் போக்கையும் கண்டுகொள்ளாமல் இருப்பது துரோகத்தின் தொடர்ச்சி.
தமிழகத்திற்கு வந்து அரசியல் பாடம் எடுத்த நபருக்கு இத்தனையும் பொருந்தும் எனக் கூறி, ராகுல் காந்தியின் விமர்சனத்திற்குத் தயாநிதி மாறன் மறைமுகமாகத் தனது எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளார்.
English Summary
DMK MP Dayanidhi Maran Hits Back at Rahul Gandhi Ettappan Remark