#BREAKING: முக ஸ்டாலின் எடுத்த அதிரடி முடிவு! சட்டப்பேரவை வளாகத்தில் திடீர் பரபரப்பு!
DMK MLA OUT TO TN ASSEMBLY
மூன்று நாள் சட்டப்பேரவைக் கூட்டத்தில் இன்று இறுதி நாள் கூட்டத்தொடரில் தமிழக முதல்வர் பல்வேறு அறிவிப்புகளை 110 விதியின் கீழ் அறிவித்து வருகிறார், அதில், வரதட்சணை கொடுமைக்கு அதிகபட்ச தண்டனையாக 7 வருடங்கள் சிறை தண்டனை வழங்கப்பட்டு இருந்ததை, 10 வருடங்களாக உயர்த்தி தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்.
புதிய கல்வி கொள்கை குறித்து எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் நிறைவேற்ற கூறினார். மேலும், குலக்கல்வி திட்டத்தின் மறு உருவம் புதிய கல்விக் கொள்கை என்றும், அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி புதிய கல்விக் கொள்கை குறித்து விவாதிக்க வேண்டும் என்றும், தேசிய கல்விக் கொள்கையை எதிர்க்க வேண்டும் என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற. சிறப்பு சட்டமன்றக் கூட்டத் தொடரை கூட்ட மறுப்பதாக கூறி, திமுக எம்எல்ஏக்கள் தற்போது வெளிநடப்பு செய்துள்ளனர்.
English Summary
DMK MLA OUT TO TN ASSEMBLY