நாம் தமிழர் கட்சியினர் கூட்டத்தில் மது பாட்டில் வீசிய திமுகவினர் கைது.! - Seithipunal
Seithipunal


திருவாரூரில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சி கூட்டத்தில் மது பாட்டில் வீசிய திமுகவை சேர்ந்த சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அக்கட்சியின் முக்கிய நிர்வாகி காளியம்மாள் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது பேசிய அவர் திமுக அரசை கடுமையாக விமர்சித்து பேசியதாக கூறப்படுகிறது. அப்போது அங்கு வந்த திமுகவினர் சிலர் மது பாட்டில்களை மேடையின் மீது வீசி உள்ளனர். இதனையடுத்து உடனடியாக நாம் தமிழர் கட்சியினர் மேடையை சூழ்ந்து கொண்டு காளியம்மாள் மீது தாக்குதல் நடைபெறாமல் தடுத்துள்ளனர்.

இதனிடையே பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மதுபாட்டில் வீசிய திமுகவினரை தடுத்து அவர்களை கட்சி அலுவலகத்திற்குள் தள்ளி அடைத்து வைத்துள்ளனர். மேலும், மதுபாட்டில் வீசிய திமுக கட்சியினரை கைது செய்ய வேண்டும் என நாம் தமிழர் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டதை அடுத்து போலீசார் கைது செய்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

DMK members arrested for throwing alcohol bottle at NTK meeting


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->