#BREAKING: செய்தியாளர்களை சற்றுமுன் சந்தித்த முக ஸ்டாலின் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.!
DMK MEET IN MARCH 7
சற்றுமுன் செய்தியாளர்களை சந்தித்த திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்தாவது, "என்னுடைய பிறந்தநாளுக்கு நேரிலும், கடிதம் மூலமாகவும், தொலைபேசி மூலமாகவும் வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இன்னும் இரண்டு மாதத்தில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நடைபெற உள்ளது. அதற்கான பரப்புரையை கடந்த சில மாதங்களாக திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் நானும், எங்களுடைய தலைமையில் இருக்கக்கூடிய தலைவர்களும் தொடர்ந்து அந்த பணியை செய்து கொண்டிருக்கிறோம்.
நேற்றிலிருந்து நம்முடைய மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இடம் பெற்றிருக்கக் கூடிய கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை தொடங்கியிருக்கிறோம். இன்னொரு பக்கத்தில் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணி கொண்டிருக்கிறது.

இந்த நிலையில், வருகிற 7ஆம் தேதி திருச்சியில் ஒரு மாநாடு போல சிறப்பான கூட்டத்தை நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளோம். அதற்கான பணிகளை வேலு மேற்கொண்டிருக்கிறார். இந்த மாநாட்டில் மிகமுக்கியமான பிரகடனத்தை., லட்சிய பிரகடனத்தை., தமிழகத்துக்கான தொலைநோக்கு பார்வையை நான் வெளியிட உள்ளேன்.
மு க ஸ்டாலின் ஆகிய நான் தமிழ்நாட்டினுடைய அடுத்த பத்தாண்டுகளுக்கு எனது தொலைநோக்கு பார்வையில் அந்த நிகழ்ச்சிகள் வெளியிட இருக்கிறேன். அடுத்த பத்தாண்டுகள் அனைத்து துறைகளிலும் தமிழ்நாடு முதலிடத்தில் இருக்கும்" என்று முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.