கூட்டணி சேர்ந்து மக்களுக்கும், மீனவர்களுக்கும் 'துரோகம்' செய்துள்ளனர்... ஜி.கே. வாசன் குற்றசாட்டு.!
dmk congress alliance betrayed TN people
மதுரை, பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க வேட்பாளர் ஆதரித்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில் அவர் பேசியிருப்பதாவது, தமிழின் பெருமைகளை உலகம் எங்கும் பிரதம நரேந்திர மோடி பரப்பி வருகிறார். தமிழ் கலாச்சாரத்தின் மீது அதிக பற்று கொண்டவர் மோடி.
மதுரையில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை தென் மாவட்ட மக்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம். இந்த விவகாரத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செங்கலை காட்டி எய்ம்ஸ் திட்டத்தை கொச்சைப்படுத்துகிறார்.
எய்ம்ஸ் மருத்துவமனை திட்டம் தொடங்கப்படாததற்கு காரணம் எதிர்க்கட்சிகள் தான். இருப்பினும் எய்ம்ஸ் மருத்துவமனை கண்டிப்பாக அமைக்கப்பட்டு பிரதமர் மோடியே அதனை திறந்து வைப்பார்.
கச்சத்தீவு பிரச்சனை தமிழக மீனவர்களின் முக்கிய பிரச்சனையாகும். கடந்த காங்கிரஸ் ஆட்சியின் போது கச்சதீவு தொடர்பாக எடுத்த முடிவுக்கு தி.மு.க துணை நின்றது. இதில் மாற்று கருத்து இருக்க முடியாது.
தமிழக மீனவர்களுக்கும் மக்களுக்கும் கச்சத்தீவு விவகாரத்தில் கூட்டணி சேர்ந்து தி.மு.க. - காங்கிரஸ் துரோகம் செய்துள்ளது. இதனை மக்கள் மறக்க மாட்டார்கள். மீனவ மக்களின் ஒரு வாக்கு கூட அவர்களுக்கு கிடையாது.
தி.மு.க ஆட்சி மீது தமிழக மக்களுக்கு அதிருப்தி ஏற்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகாலமாக மோடி அரசின் சாதனை அடுத்த வெற்றிக்கு அடித்தளமாக அமையும் என தெரிவித்துள்ளார்.
English Summary
dmk congress alliance betrayed TN people