'விருதாச்சலத்தை மாவட்டமாக அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும்'; தேமுதிக பிரேமலதா..! - Seithipunal
Seithipunal


தவெக அரசு ஆட்சிக்கு வந்தவுடன் 717 டாஸ்மாக் கடைகளை மூடுவதாக சொன்னார்கள். முதல்வர் விஜய் சொன்னது போல மூடியிருக்கிறதா என ஆய்வு செய்ய வேண்டும் என்றும், இல்லையென்றால் மக்கள் மத்தியில் நம்பிக்கை இல்லாமல் போய்விடும் என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

இன்று செய்தியாளர்களிடம் பேசும் போது அவர் மேலும் கூறியதாவது;

மக்களின் தேவையை, எதிர்பார்ப்பை தவெக அரசு பூர்த்தி செய்ய வேண்டும் என்றும், தனது விருத்தாசலம் தொகுதியை எடுத்துக் கொண்டாலே, மக்களுக்கு நிறைய செய்ய வேண்டியதாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

அத்துடன், முதலில் விருதாச்சலத்தை மாவட்டமாக அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், விவசாயிகள் யாரும் கடன் தள்ளுபடி அறிவிப்பை ஏற்கவில்லை. இது கண்துடைப்பு என போராட்டம் நடத்துகிறார்கள் என தவெக அரசுக்கு சுட்டிக்காட்டியுள்ளார்.

தவெக அரசின் அறிவிப்புக்கும், தற்போது செய்வதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை எனச் சொல்வதாகவும், போராட்டம் நடத்தும் விவசாயிகளை கைது செய்கிறார்கள். அவர்கள் தீவிரவாதிகளோ, தேச விரோத குற்றவாளிகளோ இல்லை. இது கண்டிக்கக் கூடிய விஷயம் என்று விமர்சித்துள்ளார்.

அதேப்போன்று 717 டாஸ்மாக் கடைகளை மூடுவதாக சொன்னார்கள். முதல்வர் சொன்னது போல மூடியிருக்கிறதா என ஆய்வு செய்ய வேண்டும் என்றும், இல்லையென்றால் மக்கள் மத்தியில் நம்பிக்கை இல்லாமல் போய்விடும் என கூறியுள்ளார்.

மேலும், தமிழகம் முழுவதும் வினாடிக்கு வினாடி, ஏதோ ஒரு மூலையில் பாலியல் வன்கொடுமை நடக்கிறது. இதை இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும் என்றும், போதைக் கலாச்சாரத்தையும் கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும் என்று பிரேமலதா விஜகாந்த் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

DMDKs Premalatha states that steps will be taken to declare Virudhachalam a district


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->