ஜெயலலிதா வழியில்...எம்.எல்.ஏ.க்களை உருவாக்கியவர் விஜயகாந்த் - சுதீஷ் புகழாரம்.! - Seithipunal
Seithipunal


தஞ்சாவூர் பாராளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க கூட்டணி தே.மு.தி.க வேட்பாளரை ஆதரித்து தே.மு.தி.க துணை பொதுச்செயலாளர் சுதீஷ் இன்று தஞ்சாவூர் அன்னை சத்யா மைதானத்தில் நடைபயிற்சி மேற்கொண்டு பொதுமக்களிடையே முரசு சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். 

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், தேர்தலில் போட்டியிட தி.மு.கவில் குறைந்தபட்சம் ரூ. 100 கோடி இருந்தால் தான் சீட் தருவார்கள். 

இதனை மாற்றியவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சாதாரண தொண்டனையும் மந்திரிகளாக ஆக்கியவர் அம்மா ஜெயலலிதா. 

அவரை தொடர்ந்து மறைந்த தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த், சாதாரண தொண்டர்களை வேட்பாளராக நிறுத்தி எம்.எல்.ஏக்களாக உருவாக்கினார் என தெரிவித்துள்ளார்.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

DMDK Deputy General Secretary Sudish speech


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->