ஆரம்பம்! பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் இன்று தேமுதிக ஆலோசனை கூட்டம்...! - Seithipunal
Seithipunal


வருகிற சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே உள்ள நிலையில் அரசியல் களம் சூடுபிடிக்கத் ஆரம்பித்து விட்டது.இந்த கூட்டணி, தொகுதி பங்கீடு உள்பட பல்வேறு தேர்தல் வியூகங்களை அரசியல் கட்சிகள் தீவிரப்படுத்தி வருகின்றன.

அவ்வகையில், தே.மு.தி.க. நிர்வாகிகளுடன் இன்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் 'பிரேமலதா விஜயகாந்த்' ஆலோசனை நடத்துகிறார்.இது தே.மு.தி.க. அலுவலகத்தில் நடைபெறும் இந்த ஆலோசனைக்கூட்டத்தில் மாவட்ட, செயலாளர்கள், தேர்தல் பொறுப்பாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

மேலும், தே.மு.தி.க. மண்டல பொறுப்பாளர்கள் ஆலோசனைக்கூட்டம் இன்று முதல் 14ம் தேதி வரை நடைபெறுகிறது.இதற்கு முன்னதாக, மாநிலங்களவை சீட் விவகாரத்தில் அ.தி.மு.க. மற்றும் தே.மு.தி.க. இடையே விரிசல் ஏற்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி தே.மு.தி.க. தங்கல் கூட்டணியில்தான் இருப்பதாக அ.தி.மு.க. மூத்த தலைவர் கே.பி. முனுசாமி தெரிவித்தார்.

அதேவேளை, யாருடன் கூட்டணி என்பது குறித்து வருகிற ஜனவரியில்தான் அறிவிப்போம் என்று தே.மு.தி.க. பொதுச்செயலாளர் ''பிரேமலதா விஜயகாந்த்'' தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

DMDK consultative meeting today under leadership Premalatha Vijayakanth


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->