வில்லிவாக்கத்தின் வெற்றியை மக்களுக்கே சமர்ப்பிக்கிறேன்...உயிர் உள்ளவரை உங்களுக்கு உழைப்பேன்...! - கண்ணீர் மல்க நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா...!
dedicate victory Villivakkam people work you long I live Aadhav Arjuna expressed his gratitude tears his eyes
தமிழக சட்டமன்றத் தேர்தலில், எடப்பாடி தொகுதியைத் தவிர்த்து மொத்தம் 233 தொகுதிகளில் தனித்துப் போட்டியிட்ட தமிழக வெற்றிக் கழகம், 108 இடங்களில் வெற்றி பெற்று அரசியல் அரங்கில் வலுவான சக்தியாக திகழத் தொடங்கியுள்ளது.
இந்த சிறப்பான வெற்றி, கட்சியினரிடையே உற்சாக அலைகளை எழுப்பி, மாநிலம் முழுவதும் கொண்டாட்ட மனநிலையை உருவாக்கியுள்ளது.

இந்தத் தேர்தலில், வில்லிவாக்கம் சட்டமன்றத் தொகுதியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா, தி.மு.க. வேட்பாளர் கார்த்திக் மோகனை விட 17,302 வாக்குகள் அதிகமாகப் பெற்று கணிசமான முன்னிலை வெற்றியைப் பதிவு செய்தார்.
இந்நிலையில், தனது வெற்றியைத் தொடர்ந்து வில்லிவாக்கம் மக்களுக்கு நன்றியைத் தெரிவிக்கும் வகையில் ஆதவ் அர்ஜுனா வெளியிட்டுள்ள பதிவில், “புதிய பாதை! முன்னேற்றத்தின் மாற்றம்! என்ற இலக்குகளை, உங்கள் வாக்கு எழுச்சியால் நனவாக்கி, தமிழக வெற்றிக் கழகத்திற்கு வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியை வழங்கிய அனைத்து வாக்காளர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி.
அதிகார அழுத்தங்கள், ஆட்சி தரப்பினரின் துன்புறுத்தல்கள், பணத்தின் பேராசையை முன்வைத்து செய்யப்பட்ட முயற்சிகள் ஆகியவற்றை எல்லாம் மீறி, நேர்மையையும் நம்பிக்கையையும் தேர்ந்தெடுத்த தமிழக மக்களின் தீர்மானம் எனக்கு பெருமிதத்தை அளிக்கிறது.
வில்லிவாக்கம் தொகுதியில் போட்டியிட்ட என்னை, உங்கள் குடும்பத்தின் ஒருபங்காக அண்ணன், தம்பி, மகன் என அன்போடு ஏற்றுக்கொண்டு வெற்றிப் பாதையில் நிறுத்திய வாக்காளர்கள் அனைவருக்கும் என் இதயப்பூர்வமான நன்றியை உரித்தாக்குகிறேன்” என தெரிவிக்கப்படுகின்றது.
English Summary
dedicate victory Villivakkam people work you long I live Aadhav Arjuna expressed his gratitude tears his eyes