கலாநிதி மாறனுக்கு தயாநிதி மாறன் நோட்டீஸ்! பின்னணி என்ன?
Dayanidhi Maran Kalanithi Maran Notice DMK MP Sun Network
திமுக எம்.பி. தயாநிதி மாறன், தனது அண்ணன் கலாநிதி மாறன் உட்பட எட்டு பேருக்கு எதிராக சட்ட நோட்டீஸ் அனுப்பியுள்ளர்.
இந்த நோட்டீஸில், சன் டிவி குழும பங்குகளை கலாநிதி மாறன் மோசடியாக தனது பெயரில் பதிவு செய்துள்ளார் எனக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. முரசொலி மாறன் உடல்நிலை மோசமாக இருந்த காலத்தில், சட்ட விரோதமாக கோடிக்கணக்கில் மதிப்புள்ள பங்குகளை கைப்பற்றியதாகவும், இதனால் மற்ற குடும்பத்தினருக்கு உரிய பங்குகள் வழங்கப்படவில்லை என்றும் தயாநிதி கூறியுள்ளார்.
பங்குகளை ஒருவாரத்திற்குள் திருப்பித் தராவிட்டால், சம்பந்தப்பட்ட மத்திய நிறுவனங்களுக்கு புகார் அளிக்கப்படும். அதேசமயம், சன் குழுமத்தின் வணிக நடவடிக்கைகளை நிறுத்தும் வகையில் சட்டபூர்வ நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்றும், சிவில் மற்றும் கிரிமினல் வழக்குகள் தொடரப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
இந்த வழக்கு, திமுக குடும்பத்தில் நீண்ட காலமாக நிலவி வரும் பிளவுகளை மீண்டும் வெளிப்படையாகவும், பார்வையாளர்கள் கவனத்திற்கும் கொண்டு வந்திருக்கிறது.
English Summary
Dayanidhi Maran Kalanithi Maran Notice DMK MP Sun Network