நரேந்திர மோடிக்கு என்ன தகுதி இருக்கு? - சி.வி சண்முகம் எம்.பி ஆவேசம்.!! - Seithipunal
Seithipunal


தமிழக அரசியல் தேர்தல் களத்தில் கச்சத்தீவு விவகாரம் கடந்த சில நாட்களாக பூதாகரமாக வெடித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தனியா தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டிக்கு பிறகு கச்சத்தீவு என்ற வார்த்தை அரசியல் வட்டாரத்தில் அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. 

இந்த நிலையில் விழுப்புரம் மக்களவைத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளரை ஆதரித்து முன்னாள் சட்டத்துறை அமைச்சரும் அதிமுக மாநிலங்களவை உறுப்பினருமான சிவி சண்முகம் திருக்கோவிலூர் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். 

அப்போது மக்கள் மத்தியில் பேசிய சி.வி சண்முகம் "இன்று மோடி புதுசா கச்சத்தீவு பற்றி பேசுகிறார். 2014 இல் இருந்து பத்தாண்டு காலம் இந்தியாவின் பிரதம மந்திரியாக மோடி இருந்து வருகிறார். உலக நாடுகளுக்கெல்லாம் போகும் மோடிக்கு இப்போதுதான் கட்சி தீவு தெரிகிறதா? 

இங்கு இருக்கும் மீனவர்களை அடித்துக் கொள்கிறார்கள், தினந்தோறும் கைது செய்கிறார்கள். படகுகளை அடித்து நொறுக்குகிறார்கள். அப்போதெல்லாம் கச்சத்தீவு பற்றி தெரியாத மோடிக்கு தேர்தல் வந்ததும் தெரிகிறதா? 

கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த மோடி கச்சதீவுக்காக என்ன நடவடிக்கை எடுத்தார். கச்சத்தீவு பற்றி பேச பாஜகவுக்கு என்ன தகுதி, அறுகதை இருக்கிறது? தேர்தல் நேரத்தில் மக்களை ஏமாற்ற பாஜக கட்சி தீவு பற்றி பேசி வருகிறது" என ஆவேசமாக பேசியுள்ளார் சி.வி சண்முகம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Cvshanmugam criticized BJP Narendra Modi in katchatheevu issue


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->