கைதாகிறாரா ராகுல் காந்தி?! ஜாமினில் வெளிவர முடியாத பிடிவாரண்ட்! நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு! - Seithipunal
Seithipunal


மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் வயநாடு எம்.பி. ராகுல் காந்திக்கு, ஜார்க்கண்டின் சாய்பாசா எம்.பி-எம்.எல்.ஏ நீதிமன்றம் ஜாமினில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. அவர் ஜூன் 26ம் தேதிக்குள் நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.

2018ஆம் ஆண்டு காங்கிரஸ் கூட்டத்தில் ராகுல் பேசியது தொடர்பாக, “கொலை வழக்கில் குற்றச்சாட்டுடன் ஒருவர் பாஜகவின் தலைவராக இருக்கிறார்” என அமித் ஷாவை குறித்தும் கருத்து தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் பாஜக தலைவர் பிரதாப் கட்டியார், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.

அதன் பிறகு, சாய்பாசா நீதிமன்றம் பலமுறை சம்மன் அனுப்பியிருந்தும், ராகுல் ஆஜராகவில்லை. அவர் தாக்கல் செய்த, நேரில் வருவதிலிருந்து விலக்கு கோரிய மனுவும் நிராகரிக்கப்பட்டது.

இதையடுத்து, நீதிமன்றம் ஜாமினில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து, ஜூன் 26 அன்று நேரில் ஆஜராக வேண்டும் என்று கண்டிப்பான உத்தரவு வழங்கியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

congress RahulGandhi Court arrest warrant order


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->