டெல்லியில் தலைமை தேர்தல் அதிகாரிகள் மாநாடு தொடக்கம்..! - Seithipunal
Seithipunal


இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமைத் தேர்தல் அதிகாரிகளின் இரண்டு நாள் மாநாடு இன்று தொடங்கியுள்ளது. கடந்த செப்டம்பர் 10, 2025 அன்று நடைபெற்ற நாடு தழுவிய சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆர்) ஆயத்த மாநாட்டின் தொடர்ச்சியாக இந்த மாநாடு நடத்தப்படுகிறது.

குறித்த மாநாடு தேர்தல் ஆணையர்கள் டாக்டர் சுக்பீர் சிங் சந்து, டாக்டர் விவேக் ஜோஷி முன்னிலையில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தலைமையில் நடைபெற்றது. நாடு தழுவிய சிறப்பு தீவிர திருத்தப் பயிற்சிக்காக மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளின் அலுவலகங்களின் தயார்நிலை குறித்து மதிப்பிடப்பட்டது.

இதன் போது மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் கடைசியாக பூர்த்தி செய்யப்பட்ட எஸ்ஐஆர் இன் படி வாக்காளர்களின் எண்ணிக்கை, கடைசி தேதி உள்ளிட்ட வாக்காளர் பட்டியல் குறித்து விரிவான விளக்கங்கள் அளிக்கப்பட்டன.

அத்துடன், தற்போதைய வாக்காளர்களை வாக்காளர்களுடன் வரைபடமாக்குவதற்கு முன்னர், அதிகாரிகளுக்கு வழங்கப்பட்ட வழிமுறைகளில் ஏற்பட்ட முன்னேற்றம் குறித்து மதிப்பாய்வு செய்யப்பட்ட்டுள்ளதோடு, தேர்தல் அதிகாரிகள் நியமனம், அவர்களின் பயிற்சி நிலை ஆகியவை குறித்து மதிப்பாய்வு செய்யப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Chief Electoral Officers Conference begins in Delhi


கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?




Seithipunal
--> -->