'திமுக, காங்கிரஸ் பிரிவு சற்று கசப்பானது; நாடாளுமன்றத்தில் இணைந்து செயல்படுவோம்'; கார்த்தி சிதம்பரம்..!
Congress MP Karti Chidambaram stated that they would work together with the DMK in Parliament
'திமுக, காங்கிரஸ் பிரிவு சற்று கசப்பானது என்றாலும், நாடாளுமன்றத்தில் நாங்கள் இணைந்து செயல்படுவோம்' என காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசுகையில் அவர் கூறியதாவது;
தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணி என்பது சாதாரணமானதுதான் என்றும், நாங்கள் தேர்தலில் வெற்றி பெற்றாலும், அடிமட்ட அளவில் திமுக எங்களை மாற்றாந்தாய் மனப்பான்மையோடுதான் நடத்தியது என்று கூறியுள்ளார்.

அத்துடன், உள்ளாட்சித் தேர்தல்களில்கூட முறையான அதிகாரப் பகிர்வு இல்லை எனவும், இதனால், நீண்டகால அரசியலைக் கருத்தில்கொண்டு புதிய கட்சியுடன் பயணிக்க டெல்லி மேலிடம் முடிவெடுத்ததாக குறிப்பிட்டுள்ளார். மேலும், திமுக, காங்கிரஸ் பிரிவு சற்று கசப்பானது என்றாலும், நாடாளுமன்றத்தில் நாங்கள் இணைந்து செயல்படுவோம் என்று உறுதிப்படுத்தியுள்ளார்.
மேலும், தவெகவுடன் கூட்டணி தற்போதைக்கு சுமுகமாக உள்ளதாகவும், 1967-க்குப் பிறகு இப்போதுதான் மாநில அரசில் பங்கு பெற்றுள்ளோம். வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தல்தான் இந்த கூட்டணியின் உண்மையான சோதனைக்களம் என்று குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், முதல்வர் விஜய், தான் ஒரு மதச்சார்பற்றவர் என்பதைத் திட்டவட்டமாகப் பதிவு செய்துள்ளார் என்றும், தவெக மதச்சார்பற்ற கட்சி என்பதில் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை. புதிய கட்சி என்பதால் அவர்களுக்கு கால அவகாசம் தேவை என்று கூறியுள்ளார்.
மேலும், நமது வீடுகளுக்குள்ளேயே அமைதியாக நடந்த தவெகவின் ‘நுண்ணியப் பிரச்சாரத்தை’ பாரம்பரிய கட்சிகள் கவனிக்கத் தவறிவிட்டன என்று கார்த்தி சிதம்பரம் சுட்டிக்காட்டியதோடு, உளவுத் துறை, தேர்தல் கணிப்பாளர்கள் என அனைவருமே தவெகவின் பலத்தை தவறாகக் கணித்துவிட்டோம் என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், மக்கள் சின்னத்துக்கும், கட்சிக்கும், விஜய்க்கும் மட்டுமே வாக்களித்துள்ளனர். சமூக ஊடகப் பிரச்சாரத்தை நாம் சாதாரணமாக நினைத்துவிட்டோம் என்று மேலும் கூறியுள்ளார்.
English Summary
Congress MP Karti Chidambaram stated that they would work together with the DMK in Parliament