உங்களுக்கு தமிழ் பெண்ணை திருமணம் செய்து வைக்க நாங்க ரெடி... நடைபயணத்தின் போது ராகுலுடன் உரையாடிய பெண்கள்..! - Seithipunal
Seithipunal


காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி " பாரத் ஜோடோ யாத்ரா'' என்ற பெயரில் கன்னியாகுமரி முதல் கஷ்மீர் வரை நடைபயணம் மேற்கொண்டு வருகிறார்.  தமிழகத்தில் தனது பயணத்தஒ தொடங்கிய அவர் குமரி மாவட்டம் தலச்சன்விளையில் நேற்று தனது பயணத்தை முடித்தார். இந்நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தனது டிவிட்டர் பக்கத்தில் சுவாரசிய நிகழ்வு ஒன்றை பதிவிட்டுள்ளார்.

நடைபயணத்தின் போது கன்னியாகுமரியின் மார்த்தாண்டத்தில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் பயன்பெறும் பெண்களை சந்தித்து ராகுல் காந்தி சந்தித்து பேசினார். அப்போது அவர்கள் ராகுல் காந்தியின் திருமணம் பற்றி பேசியதாகவும் அவருக்கு தமிழ்ப் பெண்ணைத் திருமணம் செய்து வைக்கத் தாங்கள் தயாராக இருப்பதாக கூறினர் என தெரிவித்தார். இதனை கேட்ட ராகுல் காந்தி சிரித்தார் எனவும் தெரிவித்துள்ளார். இந்த டிவிட்டை காங்கிரஸ் தொண்டர்கள் பகிர்ந்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Congress Member Jairam Ramesh tweet about Rahul Gandhi Interaction


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->