காங்கிரஸ் கட்சிக்கு பேரிடி - சற்றுமுன் வெளியான ராஜினாமா அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான குலாம் நபி ஆசாத், அக்கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் ஜம்மு - காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர், மத்திய அமைச்சர், காங்கிரஸ் கட்சியின் அரசிய விவகாரக் குழு உறுப்பினர் உள்ளிட்ட முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார்.

இப்படி காங்கிரசில் மிக முக்கிய தலைவர்களில் ஒருவராக இருக்கும் குலாம் நபி ஆசாத், காங்கிரஸ் தலைமை மீது அதிருப்தியில் இருந்து வந்தார். இதனால், அவர் எப்போது வேண்டுமானாலும் கட்சியிலிருந்து விலகலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இதன் காரணமாகேவே மாநிலங்களவை எம்.பி சீட் அவருக்கு வழங்கப்படவில்லை என்று சொல்லப்பட்டது.

இந்நிலையில், குலாம் நபி ஆசாத் தனது பதவியை ராஜினாமா செய்து, காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Congress Ghulam Nabi Azad Resigns


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->