முக்கிய ஏற்பாடுகள் குறித்து முதலமைச்சர் மு க ஸ்டாலின் இன்று ஆலோசனை.!! - Seithipunal
Seithipunal


செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் 44-வது சர்வதேச ஒலிம்பியாட் செஸ் போட்டி போர் பாயிண்ட்ஸ் நட்சத்திர விடுதிகள் ஜூலை 27-ம் தேதி முதல் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. 

இந்த போட்டியில், 150 நாடுகளில் இருந்து 2 ஆயிரம் வீரர்கள் பங்கேற்க உள்ளதாக தெரிவித்துள்ளனர். இதற்காக கணினி அறை, தகவல் தொடர்பு சாதனம் உடன் கூடிய அறை, சேர்மன் அறை, ஒருங்கிணைப்பாளர் அறை என அனைத்து வசதிகளுடன் கூடிய தலைமை அலுவலகம் மாமல்லபுரம் சுற்றுலா வளர்ச்சி கழக ஹோட்டலில் அமைக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் நடைபெற உள்ள சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு ரூபாய் 10 கோடி நிதி விடுவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மேலும், போட்டியில் பங்கேற்கும் இந்திய அணிக்காக முழு செலவையும் தமிழக அரசே ஏற்கிறது.

இந்நிலையில், சென்னையில் நடைபெறவுள்ள செஸ் ஒலிம்பியாட் போட்டிகளுக்கான முன் ஏற்பாடுகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார். ஒலிம்பியாட் தொடருக்கான தொடக்க விழா ஏற்பாடுகள் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தயுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

CM Stalin Meeting international chess olympiad


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->