தமிழகத்தில் மீண்டும் கட்டுப்பாடுகள்.? முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஆலோசனை.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் கொரோனா நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. ஆனால் உருமாறிய ஒமைக்ரான் வைரஸ் தற்போது இந்தியாவில் பரவ தொடங்கியுள்ளதால், மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது. 

இந்நிலையில், வருகின்ற 15ம் தேதியுடன் தமிழகத்தில் ஊரடங்கு முடிவடைகிறது. இதனால் தமிழகத்திற்கு கட்டுப்பாடுகள் மற்றும் ஊரடங்கு நீட்டிப்பது குறித்து அரசு அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஆலோசனை நடத்த உள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் நாளை காலை 10.30 மணிக்கு இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. 

ஒமைக்ரான் அச்சுறுத்தல் இருக்கும் நிலையில் ஊரடங்கு உத்தரவு மேலும் நீட்டிப்பது குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட உள்ளது. மேலும் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கலாமா.? அல்லது தற்போது உள்ள நிலை தொடரலாமா.? என்பது குறித்து முதலமைச்சர் ஆலோசனை நடத்த உள்ளார். இந்த கூட்டத்தில் தலைமை செயலாளர் இறையன்பு. வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை முதன்மைச் செயலாளர் குமார் ஜெயந்த், சுகாதாரத்துறை முதன்மை செய டாக்டர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் மற்றும் முக்கிய அமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

cm stalin meeting for lockdown


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->