#BREAKING || ஏப்ரல் 14 இனி சமத்துவ நாள் - சட்டப்பேரவையில் முக்கிய அறிவிப்பை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின்.!
CM STALIN announce 14 april 2022
இன்றைய தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் மீன்வளம், கால்நடை மற்றும் பால்வளத் துறை மானிய கோரிக்கையின் போது, தமிழக முதல்வர் ஸ்டாலின் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாளான ஏப்ரல் 14ம் தேதியை சமத்துவ நாளாக தமிழகத்தில் கொண்டாட தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இன்று தமிழக சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
மேலும், அம்பேத்கர் அவர்களின் மணிமண்டபத்தில் அவரின் முழு உருவ சிலை நிறுவப்படும் என்ற ஒரு அறிவிப்பையும் முதல்வர் முக ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
மேலும், அண்ணல் அம்பேத்கர் அவர்களின் அரிய வகை புத்தகங்களை தமிழில் மொழிபெயர்த்து, தமிழக அரசு சார்பாக வெளியிடப்படும் என்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
English Summary
CM STALIN announce 14 april 2022