ராகுல் ஒரு புள் புதர், கேஜரிவால் ஒரு சீமைக்கருவேல மரம், ஆனால் மோடி.., - மத்தியப் பிரதேச முதல்வர் அதிரடி பேச்சு!
CM shivraj singh chouhan say PM Modi kalpavriksha
மத்தியப் பிரதேச மாநில முதல்வர் ஷிவ்ராஜ் சிங் சௌஹான், டெல்லி முதல்வர் கேஜரிவால் ஒரு சீமைக்கருவேல மரம் என்றும், ராகுல் காந்தி புள் புதர் என்றும் கடுமையாக விமரிசித்து பேசியுள்ளார்.
குஜராத் மாநிலம், கட்ச் பகுதியில் இன்று நடைபெற்ற பாஜக பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்ட முதல்வர் ஷிவ்ராஜ் சிங் சௌஹான், கூடியிருந்த தொண்டர்களிடயே உற்சாகமாய் பேசினார்.
அதில் குறிப்பாக, கேஜரிவால் ஒரு சீமைக்கருவேல மரம் என்றும், ராகுல் காந்தி புள் புதர் என்றும் கடுமையாக விமரிசித்து பேசினார்.
மேலும், "பிரதமர் நரேந்திர மோடி கல்பவிருட்சம், மக்கள் என்ன வேண்டுமோ அதனை அவரிடம் கேட்டுப் பெற்றுக் கொள்ளலாம். ஆனால், ராகுல் காந்தி புள் புதர் ஒன்றுக்கும் ஆகாதவர். கேஜரிவால் ஒரு சீமைக்கருவேல மரம் போன்றவர், விவசாயத்தை நாசப்படுத்தும்.
நாட்டுக்காக அனைத்தையும் இழந்தவர் வீர் சாவர்க்கர். அப்படிபட்ட விடுதலைப் போராட்ட வீரரை ராகுல் அவமதித்துவிட்டார். இந்த நாடு அவரை எப்போதும் மன்னிக்காது.
காங்கிரஸ் கட்சியும், ஆம் ஆத்மியும் நாட்டின் அமைதியை அழித்துவிடுவார்கள் "என்று முதல்வர் ஷிவ்ராஜ் சிங் சௌஹான் பேசினார்.
English Summary
CM shivraj singh chouhan say PM Modi kalpavriksha