சூப்பர்!!! தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தலைமையில் 12 கட்சிகளுடன் ஆலோசனை...!
Chief Electoral Officer Archana Patnaik led a consultation with 12 parties
டெல்லியில் வருகிற 22 மற்றும் 23-ந்தேதிகளில், வாக்குச்சாவடி முதல் நிலை முகவர்கள் பயிற்சி முகாம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் தமிழ்நாட்டிலிருந்து அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் வாக்குச்சாவடி முதல் நிலை முகவர்கள் கலந்து கொள்கின்றனர்.

அந்த கூட்டத்தில் கலந்து கொள்ள செல்பவர்களுக்கு தேர்தல் ஆணையம் சார்பில் முன் ஏற்பாடுகள் செய்யப்படவுள்ளது.இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தலைமையில், ஆலோசனை மேற்கொள்வதற்காக சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழகத்திலுள்ள அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.இதில்,தி.மு.க., பா.ஜ.க., நாம் தமிழர் கட்சி, அ.தி.மு.க., தே.மு.தி.க., சி.பி.ஐ., விடுதலை சிறுத்தைகள், இந்திய தேசிய காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்,பகுஜன் சமாஜ் கட்சி, ஆம் ஆத்மி உள்ளிட்ட 12 அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.இதனிடையே,பல கட்சிகளும் தங்களது அரசியல் பிரச்சாரத்துக்கான வேலைகளை துவங்கியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Chief Electoral Officer Archana Patnaik led a consultation with 12 parties