#சென்னை || பட்ட கத்தியால் பிறந்த கேக் வெட்டி கொண்டாடிய புள்ளிங்கோஸ்.!  - Seithipunal
Seithipunal


சென்னை அருகே இளைஞர்கள் சிலர் பட்டாக்கத்தி உடன் கேக் வெட்டி, பட்டாசு வெடித்து கொண்டாடிய காணொளி தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ரவுடிசத்தை ஊக்குவிக்கும் விதமாக, ரவுடிகள் சிலர் தங்களுடைய பெருமையை காண்பிப்பதற்காக, பட்டாக் கத்தி மூலம் பிறந்த நாள் கேக்கை வெட்டி, அதனை வீடியோவாக சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வந்தனர்.

அதனை பார்த்து இன்ஸ்பிரேஷன் ஆகிய நடிகர் விஜய்சேதுபதி (திரைப்படங்கள் மட்டுமல்லாமல் மேடைகளிலும், பேட்டியின்போதும் சமூகத்திற்கு நல்லொழுக்கத்தை போதிக்கும் ஞானியாக தன்னை காட்டிக் கொள்ளும் அதே விஜய் சேதுபதி தான்) ரவுடிகள் போன்று பர்த் டே கேக் வெட்டிய சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

இந்தநிலையில்,  சென்னையில் இளைஞர்கள் சிலர் பட்டாக்கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய சம்பவத்தின் வீடியோ சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. மேலும் இந்த வீடியோ குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்கிடையே வெளியான முதல்கட்ட தகவலின்படி, திருமங்கலத்தை சேர்ந்த பழைய குற்றவாளியான ஆனஸ்ட்ராஜ் என்பவன் தான் தனது கூட்டாளிகளுடன் பிறந்தநாள் கேக் வெட்டி உள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

இது குறித்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சென்னை காவல் துறையினர் மற்றும் சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

chennai thirumangalam rowdy video viral


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->