#சற்றுமுன் || செய்தியாளர் சந்திப்பில் சீமான் மயக்கம்., மருத்துவமனையில் அனுமதி.! - Seithipunal
Seithipunal


திருவொற்றியூரில் மக்கள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த நிலையில், செய்தியாளர் சந்திப்பிற்கு பிறகு நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

ஆம்புலன்ஸ் மூலம் அருகில் உள்ள மருத்துவமனைக்கு சீமான் அழைத்து செல்லப்பட்டு உள்ளார்.

சென்னை திருவொற்றியூர், அண்ணாமலை நகர் குடியிருப்பு பகுதியில் ஏற்படுத்துவதற்கான அந்த பணிகள் நடந்து கொண்டிருக்கும் நிலையில், சற்று நேரத்துக்கு முன்பு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆய்வு செய்தார்.

அங்கிருந்த மக்களுக்கு ஆறுதல் தெரிவித்த சீமான், பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். செய்திகளை சந்தித்துக் கொண்டிருக்கும் போது, சீமானின் உடல்நிலை சரியில்லாமல் மயக்கமடைந்து கீழே சரிந்தார்.

தற்போது அவரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். சீமானுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், அவரின் உடல் நிலை தற்போது என்ன என்பது குறித்து மருத்துவர்களின் அறிக்கை வெளியாகவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

chennai seeman in hospital thiruvotriyur


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->