இன்று சென்னையை புரட்டி எடுக்க போகும் மழை.! புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி.! 10 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை.!
chennai rain update nov 28
நாளை (29.11.2021) வங்கக் கடலில் தெற்கு அந்தமான் கடற்பகுதியில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக தமிழகத்தில் வட கடலோரப் பகுதிகளில் உள்ள சென்னை மற்றும் டெல்டா மாவட்டங்கள் உட்பட 10 மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தொடர் கனமழை காரணமாக சென்னை மற்றும் சென்னையை சுற்றியுள்ள செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.
மேலும், டெல்டா மாவட்டங்களிலும் கனமழையின் பாதிப்பு கடுமையாக ஏற்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் பெய்த கனமழைக்கு ஒரேநாளில் (நேற்று முன்தினம்) 8 பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழக கடலோர மாவட்டங்களில் இன்று மேலும் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை ஆகிய 10 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளுக்கு வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது.
மேலும், ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
English Summary
chennai rain update nov 28