திமுகவினருக்கு ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பில் அதிரடி மாற்றம்.!  - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளாக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாத நிலையில், வருகிற டிசம்பர் மாதத்திற்குள் தேர்தல் நடத்தப்படும் என்று தமிழக அரசு சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, திமுக விருப்ப மனு வழங்குவது குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

கடந்த 11 ஆம் தேதி  சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த திமுக தலைவர் ஸ்டாலின், உள்ளாட்சித் தேர்தலை சந்திக்க தி.மு.க. தயாராக உள்ளதாகவும். மேலும், உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட விரும்புவோர் வரும் நவம்பர் 14ம் தேதியில் இருந்து 20ம் தேதி வரை விருப்ப மனுக்களை பெற்றுக்கொள்ளலாம் என்றும், காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தி.மு.க மாவட்ட தலைமையிடங்களில் உள்ள தலைமை அலுவலங்களில் விருப்ப மனுக்கள் விநியோகிக்கப்படும். விருப்பம்முள்ளவர்கள் விருப்ப மனுக்களை பெற்றுக்கொள்ளலாம் என ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.

இந்தநிலையில், உள்ளாட்சி தேர்தல் விருப்ப மனுக்கள் விநியோகிக்கப்படும் காலஅவவகாசத்தை நீடித்து திமுக தலைமை அறிவித்துள்ளது. அதன்படி வரும்  நவம்பர் 27 ஆம் தேதி வரை உள்ளாட்சி தேர்தல் விருப்ப மனுக்கள் விநியோகிக்கப்படும் என திமுக இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

changes in dmk announcement


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->