17 வகை பயிர்களின் கொள்முதல் விலை உயர்வு.. மத்திய அரசு அறிவிப்பு.!! - Seithipunal
Seithipunal


பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் அறிவித்துள்ளார். அதன்படி, நெல் உள்ளிட்ட 17 வகையான பயிர்களின் கொள்முதல் விலையை உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். 

நெல் குவிண்டால் ஒன்றுக்கு குறைந்தபட்சம் ஆதரவு விலை ரூ.100 உயர்த்தி ரூ2,040 ஆக அதிகரித்துள்ளது. 2022-2023 ஆம் ஆண்டில் குவிண்டால் ஒன்றுக்கு குறைந்த பட்ச ஆதார விலை ரூபாய் 100 உயர்த்தப்பட்டுள்ளது. 

எள் குவிண்டாலுக்கு ரூ.523 உயர்த்தியும், பாசிப்பருப்பு குவிண்டாலுக்கு ரூபாய் 480 உயர்த்தியும், சூரியகாந்தி விதை ரூபாய் 385 உயர்த்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

central minister anurag thakur press meet


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->