உத்திரபிரதேசத்தில் பரபரப்பு.. முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்.! - Seithipunal
Seithipunal


உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்துக்கு மர்ம நபர் ஒருவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார்.

உத்தர பிரதேசத்தில் சட்டப்பேரவை தேர்தலில் 2-வது முறையாக பா.ஜ.க. ஆட்சியை பிடித்தது. இதனையடுத்து முதலமைச்சராக யோகி ஆதித்யநாத் 2-வது முறையாக மீண்டும் பொறுப்பேற்று உள்ளார். 

அவர் 2வது முறையாக பொறுபேற்ற பிறகு பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் காவல் நிலைய கட்டுப்பாட்டு அறையின் உதவி எண்ணுக்கான வாட்ஸ்அப்புக்கு ஒரு தகவல் வந்துள்ளது. 

அதில் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் மீது இன்னும் 3 நாட்களில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்படும் என எச்சரிக்கை விடப்பட்டு இருந்தது. இந்த மிரட்டல் செய்தி கடந்த 2-ந்தேதி விடப்பட்டு இருந்தது. இதுகுறித்து உதவி எண் சேவைக்கான உயரதிகாரி போலீசில் வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ளார். 

முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபரை அடையாளம் காணும் மற்றும் கைது செய்யும் பணி நடந்து வருகிறது. சுஷாந்த் கோல்ப் சிட்டி காவல் நிலையத்தில் வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை நடந்து வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Bomb threat to Chief Minister Yogi Adityanath


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->