தேர்தல் வாக்குறுதியில் ஜல்லிக்கட்டுக்கு தடை.! ராகுல் காந்தி வருகைக்கு கடும் எதிர்ப்பு.! - Seithipunal
Seithipunal


ஜனவரி 14 ஆம் தேதி முதல் ஜனவரி 31 ஆம் தேதி வரை வடநாடு, ஜல்லிக்கட்டு, எருது விடும் நிகழ்ச்சி நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இன்று காலை 8 மணி அளவில் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது. போட்டியை அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜு தொடக்கி வைத்தார். 

தமிழர் திருநளையொட்டி மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது. இன்று காலை தொடங்கிய இந்த போட்டியில் ஏராளமான வீரர்கள் கலந்துகொண்டு வாடிவாசல் வழியாக வரும் காளைகளை அடக்கி வருகின்றனர். 

இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 780 காளைகள், 430 மாடுபிடி வீரர்கள் கலந்துகொண்டுள்ளனர். வாடிவாசல் வழியாக சீறிப்பாயும் காளைகளை வீரர்கள் அடக்கி வருகின்றனர்.

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிக்கு வருகை தந்த தேசிய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை வரவேண்டாம் எனக் கூறி அவனியாபுரம் அருகே உள்ள ஹர்ஷிதா மருத்துவமனை முன்பு இந்து முன்னணி மற்றும் பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடை விதித்த காங்கிரஸ் கட்சியின் வாரிசு ஜல்லிக்கட்டு போட்டியை பார்க்க வருவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கோஷமிட்டனர். தேர்தல் அறிக்கையில் ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்படும் என்று வாக்குறுதி அளித்த ராகுல் காந்திக்கு ஜல்லிக்கட்டு வர எந்த தகுதியும் இல்லை என்று கோஷமிட்டனர். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

BJP protest against rahul avaniyapuram


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->