நடுங்கிப்போன திருமாவளவன்! நெற்றியில் இட்ட திருநீர் அழிப்பு! திருமா தான் மதவாதி - கொந்தளிக்கும் பாஜக நாராயணன்!!
BJP Narayanan condemn to VCK Thirumavalavan
பாரதிய ஜனதா கட்சி மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "இன்று திருப்பரங்குன்றம் கோவிலுக்கு சென்று வழிபட்ட திருமாவளவன் கோவிலில் வழங்கப்பட்ட மரியாதைகளை ஏற்றுக்கொண்டு, அந்த கோவிலில் நெற்றி நிறைய திருநீறு இட்டுக்கொண்ட காட்சியை காண நேர்நதது.
பின்னர் கோவிலில் இருந்த பொது மக்கள் புகைப்படம் எடுத்துக்கொள்ள விருப்பப்பட்டபோது நெற்றியில் இருந்த திருநீறை அழித்து விட்டு செல்ஃபி எடுத்துக்கொண்டது ஹிந்துமத நம்பிக்கைகளை தொடர்நது அவமதிக்கும் திருமாவளவனின் ஹிந்து விரோத போக்கையே குறிக்கிறது. நம்பிக்கையில்லையெனில் திருநூறை பூசிக் கொண்டிருக்க தேவையில்லை.
யாரும் கட்டாயப்படுத்துவமில்லை. மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு நடைபெற உள்ள நிலையில், திருமாவளவன் அவர்களின் இந்த கோவில் வழிபாடு நாடகம் ஹிந்து ஒற்றுமை என்பது எந்த அளவிற்கு அவர்களை நடுநடுங்க செய்திருக்கிறது என்பதை உணர்த்துகிறது.
ஹிந்து மத சின்னங்களில் ஒன்றான திருநீறை கோவிலிலேயே அழிக்கும் திருமாவளவன் மற்ற மத சின்னங்களை அணிந்து கொண்டு அழகு பார்ப்பது தான் போலி மதசார்பின்மை.
மனம் முழுக்க ஹிந்து மத வெறுப்பை சுமந்து கொண்டு, மனம் முழுக்க சிறுபான்மை சமுதாயத்தின் ஓட்டுக்களை எண்ணிக்கொண்டு அரசியல் பிழைப்பு நடத்தும் போலி மதசார்பின்மை அரசியல்வாதிகள் தான் மதவாதிகள்" என்று நாராயணன் திருப்பதி விமர்சித்துள்ளார்.
English Summary
BJP Narayanan condemn to VCK Thirumavalavan