ரூ.650 கோடி எங்கிருந்து வந்தது...? பிரசாந்த் கிஷோர் மீது எம்பி பரபரப்பு குற்றச்சாட்டு! - Seithipunal
Seithipunal


பீகார் மாநில சுயேச்சை எம்.பி. ராஜேஷ் ரஞ்சன் என்கிற பப்பு யாதவ், தனியார் தொலைக்காட்சி சேனலுக்கு அளித்த பேட்டியில் தேர்தல் வியூகம் வகுப்பாளர் பிரசாந்த் கிஷோரை கடுமையாக விமர்சித்தார்.

அதில், “பிரசாந்த் கிஷோர் முதலில் பீகாரில் நிதிஷ் குமாரை ‘வளர்ப்பு தந்தை’ என அழைத்து அவருடன் இருந்தார். பின்னர் ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டியுடனும், மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜியுடனும் இணைந்தார். தேர்தல் வியூகம் உருவாக்கும் ஆலோசனை நிறுவனம் மூலம் பணம் சம்பாதிப்பதாக அவர் கூறுகிறார். ஆனால் அவரது நிறுவனத்தின் நிதி அறிக்கையில் இதுகுறித்து எந்தத் தெளிவும் இல்லை,” என்றார்.

மேலும், பிரசாந்த் கிஷோரின் கம்பெனி எந்த அளவில் வருமானம் பெற்றது, யார் மூலம் பணம் பெற்றது என்ற விவரங்கள் வெளிச்சமிடப்படவில்லை என பப்பு யாதவ் குற்றம்சாட்டினார். “பீகார் தேர்தலுக்காக அவர் ரூ.650 கோடி திரட்டினார். அந்த தொகை எங்கிருந்து வந்தது என்பது கேள்விக்குறி. இதன் மூலம் பீகாரை கொள்கை என்ற பெயரில் கொள்கலனாக மாற்றி விட்டார்,” என அவர் கடுமையாக விமர்சித்தார்.

மேலும், பிரசாந்த் கிஷோர் அரசியல் ஆலோசனையல்ல, பண அடிப்படையிலான ஒப்பந்த அரசியலை நடத்துகிறார் எனவும், பல்வேறு மாநிலங்களில் அவர் ஈடுபட்ட தேர்தல் பிரச்சாரங்கள் நம்பிக்கையை மீறி பண அரசியலை ஊக்குவித்துள்ளதாகவும் பப்பு யாதவ் குற்றஞ்சாட்டினார்.

அவரது இந்த குற்றச்சாட்டுகள் பீகார் அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

bhihar MP Condemn to prasanth kishore


கருத்துக் கணிப்பு

வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப்பணி...



Advertisement

கருத்துக் கணிப்பு

வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப்பணி...




Seithipunal
--> -->