குறையே இல்லாத ஆட்சி..புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி பெருமிதம்.!!
Best government in Pondicherry cm rangasamy speech
இந்தியாவில் மக்களவை தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் ஒன்றாம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுவையில் ஒரு மியப்ரல் 19ஆம் தேதி மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் இரண்டே நாட்கள் உள்ள நிலையில் அனைத்து கட்சி வேட்பாளர்களும் அனைத்து கட்சி தலைவர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்ட வருகின்றன.
அந்த வகையில் பாண்டிச்சேரி நாடாளுமன்ற பாஜக வேட்பாளர் நமச்சிவாயத்தை ஆதரித்து புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி பேசுகையில், எங்கள் ஆட்சியில் எல்லா திட்டங்களையும் செயல்படுத்து வருகிறோம். அறிவித்த அனைத்து திட்டங்களையும் நிறைவேற்றி உள்ளோம்.
தேசிய ஜனநாயக கூட்டணி இடம் பெற்றுள்ளதால் நாடாளுமன்ற தொகுதியை பாஜக வெற்றி விட்டுக் கொடுத்து விட்டோம். பிரச்சாரத்தில் மக்கள் எந்த குறையும் கூறவில்லை ஆட்சியைப் பற்றி, இலவசமாக அரிசி வழங்க கோரிக்கை வைத்துள்ளனர் தேர்தல் முடிந்த பிறகு அவர்களது கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று பேசினார்.
English Summary
Best government in Pondicherry cm rangasamy speech