ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி: வீரர்களின் கடின உழைப்பும் உறுதியும் எதிர்கால முயற்சிகளுக்கும் வாழ்த்துக்கள்! - பிரதமர் மோடி - Seithipunal
Seithipunal


கடந்த 27-ந் தேதி, தென் கொரியாவிலுள்ள குமி நகரில் 26-வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி தொடங்கியது. இதில் உலகிலுள்ள 43 நாடுகளை சேர்ந்த 2000  வீரர்-வீராங்கனைகள் பங்கேற்றனர். இந்த விளையாட்டுத் தொடர் நேற்றுடன் நிறைவடைந்தது.

இப்போட்டியில் சீனா நாடு 15 தங்கம், 8 வெள்ளி, 3 வெண்கலம் என 26 பதக்கங்களுடன் முதலிடம் பிடித்தது. இந்தியா 8 தங்கம், 10 வெள்ளி, 6 வெண்கலம் என 24 பதக்கங்களுடன் 2-வது இடத்தை தனதாக்கியது.

இந்த நிலையில், இந்த போட்டியில் வெற்றி பெற்ற இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் வலைதள பக்கம் மூல வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி:

அதில் அவர் பதிவிட்டதாவது,"தென் கொரியாவில் சமீபத்தில் நடைபெற்ற 2025 ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் நமது அணியின் அற்புதமான செயல்திறனுக்காக இந்தியா பெருமை கொள்கிறது.

ஒவ்வொரு விளையாட்டு வீரரின் கடின உழைப்பும் உறுதியும் போட்டி முழுவதும் தெளிவாகத் தெரிந்தது. விளையாட்டு வீரர்களின் எதிர்கால முயற்சிகளுக்கு வாழ்த்துகள்" என்று குறிப்பிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Asian Athletics Championships Congratulations athletes for their hard work determination and future endeavors PM Modi


கருத்துக் கணிப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கின் தீர்ப்புக்கு பின்பும், யார் அந்த சார்? என்ற எதிர்க்கட்சிகளின் கேள்வி!



Advertisement

கருத்துக் கணிப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கின் தீர்ப்புக்கு பின்பும், யார் அந்த சார்? என்ற எதிர்க்கட்சிகளின் கேள்வி!




Seithipunal
--> -->