திமுக முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமி மருத்துவமனையில் அனுமதி.. அதிர்ச்சியில் திமுகவினர்.!!
arcot n veeraswami admitted hospital
திமுக முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமி மருத்துவமனையில் அனுமதி அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தொடக்க காலம் முதல் முக்கிய பங்கு வகிப்பவர் ஆற்காடு வீராசாமி. இவர் திமுகவில் பொருளாளராக 1994 முதல் 2008 வரை பணியாற்றியுள்ளார். மேலும் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவராக 2001 முதல் 2006 வரை பணியாற்றியுள்ளார்.

மூன்று முறை அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார். 2011 ஆம் ஆண்டுக்கு பிறகு தமிழக சட்டமன்றத் தேர்தலில் உடல் நலம் சரி இல்லை என்ற காரணத்தால் அவர் போட்டியிடவில்லை.
இந்நிலையில், திமுக முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமி சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வீட்டில் தவறி விழுந்ததில் காலில் சிறிய அளவில் முறிவு ஏற்பட்டுள்ளதாக அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
English Summary
arcot n veeraswami admitted hospital