மார்ச் 12க்கு அப்புறம் "வீடியோ கான்பரன்ஸ்" வச்சுக்கலாமா? ED-க்கு கெஜ்ரிவாலின் நெத்தியடி.!!
Aravind kejriwal wrote letter to ed in new alcoholic policy case
மார்ச் 12ம் தேதிக்கு பிறகு ஆஜராக தாயார் என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறைக்கு கடிதம் எழுதியுள்ளார். டெல்லிஅரசின் மதுபான கொள்கை முறைக்கேடு வழக்கில் இன்று நேரில் ஆஜராகுமாறு அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை 8வது முறையாக சம்மன் அனுப்பிய நிலையில் கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில் அமலாக்கத்துறை அனுப்பியுள்ள சம்மன் சட்டவிரோதமானது. இருப்பினும் அதற்கு பதிலளிக்க தயாராக இருக்கிறேன். ஆனால் இன்று என்னால் ஆஜராக முடியாது. வரும் மார்ச் 12ம் தேதிக்கு பிறகு தேதி குறித்தால் ஆஜராக தயார். அதுவும் வீடியோ கான்பரன்சிங் முறையில் மட்டுமே ஆஜராக முடியும் என அரவிந்த் கெஜ்ரிவால் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
English Summary
Aravind kejriwal wrote letter to ed in new alcoholic policy case