பாஜக எங்களைப் பார்த்து பயப்படுகிறது .. ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால்.!
Aravind Kejriwal speech about BJP
டெல்லி மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் ஆட்சியைப் பிடித்துள்ள ஆம் ஆத்மி கட்சி குஜராத்தில் ஆட்சியை பிடிக்க தீவிரம் காட்டி வருகிறது. மேலும் இமாச்சல பிரதேச தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளது.
கடந்த மாதம் தொடக்கத்தில் குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் நடந்த பேரணியில் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் பங்கேற்றிருந்தனர்.
அதன் தொடர்ச்சியாக இன்று சூரத் நகரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் கலந்து கொண்டு உரையாற்றுகிறார்.
மேலும் குஜராத் மாநில சட்டப் பேரவைக்கான பதவி காலம் விரைவில் முடிவடைய உள்ளதால், இந்தாண்டு இறுதியில் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் ஆம் ஆத்மி கட்சியைப் பார்த்து பாஜக பயன்படுவதாகவும், குஜராத் சட்டப் பேரவையை கலைத்துவிட்டு முன்கூட்டியே தேர்தலை சந்திக்க பாஜக திட்டமிட்டு வருவதாகவும் தனது ட்விட்டர் பக்கத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
English Summary
Aravind Kejriwal speech about BJP