அதிர்ச்சி மேல் அதிர்ச்சியில் அதிமுகவினர்.. திமுகவில் ஐக்கியமாக போகும் முன்னால் அமைச்சர்.? - Seithipunal
Seithipunal


அதிமுகவின் முன்னாள் அமைச்சரும், முன்னாள் எம்பியும், அக்காட்சியின் சிறுபான்மையினர் நலப் பிரிவுச் செயலாளருமான அன்வர் ராஜா சமயத்தில் அக்கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி குறித்து கருத்துக்களை வெளியிட்டார். மேலும், சசிகலாவிற்கு ஆதரவான நிலைப்பாட்டில் இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. 

இது கடந்த 24ஆம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில்  எதிரொலித்தது. இதனால் முன்னாள் அமைச்சர் சிவி சண்முகத்துக்கும், அன்வர் ராஜாவுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, அன்வர் ராஜாவுக்கும் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என நிர்வாகிகள் வலியுறுத்தினர். 

இதையடுத்து, அன்வர் ராஜாவுக்கும் கட்சியில் இருந்து நீக்கி அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிவித்துள்ளனர். 

இந்நிலையில், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட அன்வர் ராஜாவை திமுக பக்கம் இழுக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்காக போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. கட்சியில் சீனியரான உங்களுக்கு கட்சியில் மரியாதை இல்லை. உங்களுக்கு முக்கிய பொறுப்பு தருகிறோம். சிறுபான்மையினரை மதிக்கின்ற கட்சி திமுக என திமுக தரப்பில் தூது சென்று உள்ளதாக கூறப்படுகிறது. அதிமுகவை மீட்டெடுப்பதில் சசிகலா திணறி வரும் நிலையில், அவருடன் இணைந்தால் பயன் இருக்காது என்பதால் ஆளும் கட்சியில் இணைவதை அன்வர் ராஜா விரும்புவார் என கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

anwhar raajhaa may be join dmk


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->