ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை சந்திப்பு.. பேசப்பட்ட முக்கிய விவகாரம்.!! - Seithipunal
Seithipunal


தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை சந்தித்துள்ளார்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று 12 மணி அளவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து பேசினார். 

இந்த சந்திப்பின்போது, கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே உள்ள கனியாமூர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்த மாணவி ஸ்ரீமதி கடந்த ஜூலை 13ம் தேதி பள்ளியின் மூன்றாவது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்ட விவகாரம் மற்றும் மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்டு கடந்த 17ஆம் தேதி நடைபெற்ற போராட்டம் வன்முறையாக மாறியது  குறித்து பேசியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், மதுரையில் 2019 ஆம் ஆண்டில் சுமார் 200 பேர் போலி பாஸ்போர்ட் பெற்றிருக்கும் விவகாரத்தில் தமிழ்நாடு உளவுத்துறை ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதத்தை இடைநீக்கம் செய்து, விசாரிக்க வேண்டும் என ஆளுநரிடம் அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

annamalai meet to governor rn ravi for srimathi death issue


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->