30 ஊர் வழியாக நடைபயணம்.. பாமக தலைவர் Dr.அன்புமணி ராமதாஸ் அதிரடி கோரிக்கை.! - Seithipunal
Seithipunal


ஒகேனக்கல் பகுதியில் ஆரம்பித்து, பொம்மிடி, பென்னாகரம், அரூர் உள்ளிட்ட 30 ஊர் வழியாக காவிரி உபரி நீர் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என கோரிக்கை வைத்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் நடைபயணம் மேற்கொண்டு இருக்கிறார்.

தர்மபுரி மாவட்டத்தில் வளர்ச்சிக்காக இந்த காவிரி உபரி நீர் திட்டத்தை செயல்படுத்த மற்றும் மாவட்ட மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த இத்தகைய நடை பயணத்தை ஒகேனக்கல் பகுதியில் அன்புமணி ராமதாஸ் துவங்கியுள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "தருமபுரி - காவிரி உபரி நீர் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி 3 நாள் நடைபயணத்தை தொடங்கினேன்." என்று தெரிவித்துள்ளார். 

இன்று இந்த பயணத்தை துவங்கிய அன்புமணி ராமதாஸ் பெண்ணாகரம், தர்மபுரி, அரூர், பாப்பிரெட்டிப்பட்டி வழியே சென்று ஞாயிற்றுக்கிழமை நிறைவு செய்ய இருக்கிறார். அவருடன் அரசியல் தொண்டர்கள், சமூக ஆர்வலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். 

பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி, "இதை நான் அரசியலுக்காக செய்யவில்லை. இந்தத் திட்டம் நிறைவேறும் வரை ஓயமாட்டேன். இந்த நடை பயணத்தில் அனைத்து தரப்பு மக்களும் கலந்து கொள்ள வேண்டும்." என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Anbumani Ramadoss Conquest cauvery River water issue


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->