அமமுக தொண்டர்களுக்கு கட்சித்தலைமை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.!! - Seithipunal
Seithipunal


மொழிப்போர் தியாகிகளுக்கு வீர வணக்கம் செலுத்துவது குறித்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், தொண்டர்களுக்கு ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

இதுகுறித்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், உடலையும்‌ உயிரையும்‌ அன்னைத்‌ தமிழ்மொழிக்காக தியாகம்‌ செய்த அருபெரும்‌ தீரர்களான மொழிப்போர்‌ தியாகிகளுக்கு அம்மா மக்கள்‌ முன்னேற்றக்‌ கழகத்தின்‌ சார்பில்‌ வருகிற 25.01.2022 (செவ்வாய்க்கிழமை) தமிழகம்‌ முழுவதும்‌ வீரவணக்கம்‌ செலுத்திடுவோம்‌. அன்றைய தினம்‌ ஊர்கள்தோறும்‌ மொழிப்போர்‌ தியாகிகளின்‌ திருவுருவப்படங்களுக்கு மலரஞ்சலி செலுத்தி வணங்கிடுவோம்‌.

அனைத்து கழக மாவட்டங்களிலும்‌ உள்ள மாணவர்‌ அணி நிர்வாகிகள்‌ அந்தந்த பகுதியிலுள்ள நிர்வாகிகளுடன்‌ இணைந்து இந்நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகளைச்‌ செய்திடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்‌. புரட்சித்தலைவி அம்மா அவர்களின்‌ வழியில்‌ அன்னைத்‌ தமிழ்மொழியைக்‌ காத்து நின்றிடவும்‌ நம்‌ தாய்மொழிக்கு கிடைக்க வேண்டிய பெருமைகள்‌ அனைத்தையும்‌ பெற்றுத்தந்திடவும்‌ காலத்திற்கேற்ற வகையில்‌ தமிழின்‌ வளர்ச்சியை ஊக்குவித்திடவும்‌ பாடுபட மொழிப்போர்‌ தியாகிகளின்‌ வீரவணக்க நாளில்‌ உறுதியேற்றிடுவோம்‌.

இந்நிகழ்வுகள்‌ அனைத்திலும்‌ கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக பின்பற்றிடுமாறு கழக உடன்பிறப்புகள்‌ அன்போடு கேட்டுக்‌ கொள்ளப்படுகிறார்கள்‌. கொள்ளப்படுகிறது என தெரிவித்துள்ளனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

ammk statement on jan 22


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->