போர் பதற்றம்! பாகிஸ்தானின் லாகூரிலிருந்து அமெரிக்கர்கள் வெளியேற உத்தரவு!
American Embassy Operation Sindoor lahore PAK
இந்தியா-பாகிஸ்தான் இடையே நிலவும் போர் பதற்ற சூழ்நிலையில், பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா மே 7ஆம் தேதி நள்ளிரவில், காஷ்மீர் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில் உள்ள 9 பயங்கரவாத முகாம்களை வெகு குறுகிய நேரத்தில் தாக்கி அழித்தது.
இந்த தாக்குதலுக்குப் பதிலாக, பாகிஸ்தான் இந்திய எல்லையில் உள்ள குடியிருப்புப் பகுதிகளை நோக்கி மோர்டார்கள் மற்றும் கனரக பீரங்கிகளால் தாக்குதல் நடத்தியது. இதில் 16 பொதுமக்கள், அதில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்பட பலர் உயிரிழந்தனர்.
அதைத் தொடர்ந்து, மே 8ஆம் தேதி இரவு, பாகிஸ்தான் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் இந்திய ராணுவ முகாமுகளைத் தொடர்ந்து தாக்கியது. இந்த தாக்குதலில் அவந்திபுரா, ஜம்மு, பதான்கோட்டை, சண்டிகார், லூதியானா, பூஜ் உள்ளிட்ட முக்கிய ராணுவ மையங்கள் குறிவைக்கப்பட்டன.
இந்திய விமானப்படை, எஸ்-400 ‘சுதர்ஷன் சக்ரா’ வான் பாதுகாப்பு அமைப்பை பயன்படுத்தி பெரும்பாலான தாக்குதல்களை வெற்றிகரமாக முறியடித்தது. அதே நேரத்தில், இந்தியா லாகூரில் பயங்கரவாத தளங்களை ட்ரோன்கள் மூலம் தாக்கியதால், அங்கு பரபரப்பு நிலவுகிறது.
இதையடுத்து, லாகூரில் உள்ள அமெரிக்க தூதரகம், தங்களது குடியரசுப் பிரஜைகள் பாதுகாப்பான இடங்களுக்கு இடமாற்றம் செய்ய வேண்டும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.
English Summary
American Embassy Operation Sindoor lahore PAK