அம்பத்தூர் பிரசார தேதி அறிவிப்பு ...! - 'மக்களை காப்போம்' முழக்கத்துடன் களமிறங்கும் எடப்பாடி பழனிசாமி...!
Ambattur campaign date announced Edappadi Palaniswami launches campaign slogan Lets protect people
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி, “மக்களை காப்போம்… தமிழகத்தை மீட்போம்” என்ற முழக்கத்துடன் மாநிலம் முழுவதும் சட்டமன்ற தொகுதி தோறும் தீவிரப் பிரசாரப் பயணத்தை மேற்கொண்டு வருகிறார். 
மேலும், மக்கள் சந்திப்பு, கட்சி வலுப்படுத்தல், உள்ளூர் பிரச்சினைகள் கேட்பு ஆகியவற்றை மையமாகக் கொண்டு அவரது சுற்றுப்பயணம் வேகமெடுத்து வருகிறது.
அந்த வரிசையில், வருகிற 21-ஆம் தேதி (சனிக்கிழமை) அம்பத்தூர் பகுதியில் உள்ள ராக்கி தியேட்டர் அருகே அவர் பொதுமக்களை நேரில் சந்தித்து தேர்தல் பிரசாரம் நடத்த திட்டமிட்டுள்ளார்.
இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திருவள்ளூர் தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான வி. அலெக்சாண்டர் தலைமையில் கட்சி நிர்வாகிகள் தீவிரமாக செய்து வருகின்றனர்.
இதற்காக கட்சி பொறுப்பாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தி, பிரசாரத்தை வெற்றிகரமாக நடத்தத் திட்டமிடப்பட்டு வருகிறது.
English Summary
Ambattur campaign date announced Edappadi Palaniswami launches campaign slogan Lets protect people