திமுக அமைச்சரால் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முக்கிய நிர்வாகி.!! - Seithipunal
Seithipunal


அதிமுகவின் முக்கிய நிர்வாகி திமுக அமைச்சருக்கு பூங்கொத்து கொடுத்ததால் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

திருநெடுங்குளம் ஊராட்சியின் தலைவர் ஸ்ரீநிதி, கிராமசபா கூட்டத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு வரவேற்பு அளித்து, பூங்கொத்து கொடுத்தார். இதனால் அதிருப்தி அடைந்த திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் குமார், அதிமுக மேலிடத்திற்குத் இது குறித்து தகவல் தெரிவித்தார். 

இதையடுத்து, அதிமுக உட்கட்சி தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்பு மனு தாக்கல் ஸ்ரீநிதி சென்ற போது அதிமுகவினர் வேட்பு மனு தாக்கல் செய்யவிடாமல் தடுத்தனர். இதுகுறித்து மாவட்டச் செயலாளர் குமாரிடம், ஸ்ரீநிதி கேட்டபோது, நீங்கள் எந்த கட்சியில் இருக்கிறீர்கள்.? உங்களை கட்சி விட்டு நீக்க சொல்லி ஏற்கனவே பரிந்துரை அளித்து விட்டோம் எனக் கூறியுள்ளார். 

ஏற்கனவே ஸ்ரீநிதி திமுகவுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்ததால், அவர் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

ADMK Panchayat Leader Dismissed for party


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->