#BigBreaking || ஓபிஎஸ், இபிஎஸ்.,க்கு அதிர்ச்சி கொடுத்த காவல்துறை.! அங்கிட்டு 15, இங்கிட்டு 15.., ஆட்டம் ஆரம்பம்.!
admk ops vs eps issue rayapet police station
ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற கலவரம் தொடர்பாக, ஓ பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களுக்கு போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர். ராயப்பேட்டை காவல் நிலையத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 11ஆம் தேதி அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. ஓ பன்னீர்செல்வம் பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொள்ளாமல், கட்சியின் தலைமை அலுவலகமான ராயப்பேட்டையில் உள்ள எம்ஜிஆர் மாளிகைக்கு சென்றார்.
அப்போது ஓ பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்களுக்கும், எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. இதன் காரணமாக அந்த பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் மற்றும் எம்ஜிஆர் மாளிகை சூறையாடப்பட்டது.
மேலும், அதிமுக தலைமை அலுவலகத்தில் இருந்த பல ஆவணங்களையும் ஓபிஎஸ் ஆதவலர்கள் எடுத்துச் சென்றதாக எடப்பாடி தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்த வன்முறை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது பல்வேறு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், வீடியோ ஆதாரத்தை வைத்து, ஓ பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் 15 பேருக்கும், எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் 15 பேருக்கும் போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர்.
ராயப்பேட்டை காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி அவர்கள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓ பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் நாளையும், எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் நாளை மறுநாளும் ராயப்பேட்டை காவல் நிலையத்தில் ஆஜராகி நேரில் விளக்கம் அளிக்குமாறு அந்த சாமானில் குறிப்பிடப்பட்டுள்ளது.
English Summary
admk ops vs eps issue rayapet police station