யார் உண்மையில் அதிமுக? சற்றுமுன் உச்சநீதிமன்றத்தில் அதிமுக தலைமை கழகம் தாக்கல் செய்த பரபரப்பு மனு.! - Seithipunal
Seithipunal


அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்க வேண்டுமென ஓ பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், பொதுக்குழுவை நடத்தலாம் என உத்தரவிட்டது. 

இதையடுத்து, கடந்த 11ஆம் தேதி அதிமுக பொதுக்குழு நடைபெற்று முடிந்தது. அந்த பொதுக்குழுவில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, இடைக்கால பொதுச் செயலாளர் தேர்ந்தெடுக்கப்பட்டார். 

உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக ஓ பன்னீர்செல்வம் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் கடந்த 15ஆம் தேதி மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. 

ஓ பன்னீர்செல்வம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுவை உச்ச நீதிமன்றம் இன்று விசாரிக்கிறது. 

இந்நிலையில், அதிமுக தலைமைக் கழகம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் ஒரு கேவிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பொது குழு தொடர்பாக தங்கள் தரப்பு வாதத்தை கேட்காமல், எந்தவித ஒரு உத்தரவையும் பிறப்பிக்க கூடாது என்று, அந்த கேவிட் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே இதே கோரிக்கையை வலியுறுத்தி அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஒரு தாக்கல் செய்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

சட்ட ரீதியாக யார் அதிமுக என்பதில் தொடர்ந்து குழப்பம் நிலவி வரும் நிலையில், இன்றைய வழக்கு விசாரணை மற்றும் அதில் பிறப்பிக்கப்படும் உத்தரவு என்பது, அதிமுகவின் முக்கிய ஒரு உத்தரவாக அமையும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

admk ops eps issue admk head appeal to sc


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->