#BigBreaking || ஓபிஎஸ் வழக்கில் திடீர் திருப்பம்... சற்றுமுன் சென்னை உயர்நீதிமன்றம் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு.!
ADMK OPS EPS CHENNAI HC CASE ADMK MEET
அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் தீவிரமடைந்துள்ளது. எடப்பாடி பழனிசாமி தரப்பு ஒற்றைத் தலைமையை கொண்டு வர வேண்டுமென வலியுறுத்தி வருகின்றனர். மேலும், எடப்பாடி பழனிசாமியை கட்சியின் பொதுச் செயலாளராக நியமிப்பதற்கான ஏற்பாடுகளை அவரது ஆதரவாளர்கள் தீவிரமாக செய்துவருகின்றனர்.
கடந்த கடந்த 23ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழுவில் எந்த தீர்மானங்களும் நிறைவேற்றப்படவில்லை. ஆகையால், 11 ஆம் தேதி நடைபெறும் பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி பொதுச் செயலாளராக நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த பொதுக்குழு கூட்டத்தை தடுத்து நிறுத்துவதற்கு உண்டான அனைத்து முயற்சிகளையும் ஓ பன்னீர்செல்வம் தரப்பு மேற்கொண்டு வருகிறது. ஓ பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் அடுத்தடுத்து பொதுக்குழுவிற்கு தடை கோரி மனு தாக்கல் செய்து வருகின்றனர்.
இதனிடையே ஜூலை 11ஆம் தேதி நடைபெற உள்ள அதிமுக பொது குழுவிற்கு தடை கோரி ஓ பன்னீர்செல்வம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு இன்று காலை 11.30 விசாரணைக்கு வர உள்ளதாக நீதிமன்றம் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், பொதுக்குழுவுக்கு தடை கோரிய ஓபிஎஸ் வழக்கை இன்றைய நாளின் கடைசி வழக்காக விசாரணை செய்ய உள்ளதாக சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இன்று 52 வழக்குகள் பட்டியலிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
English Summary
ADMK OPS EPS CHENNAI HC CASE ADMK MEET